" alt="" aria-hidden="true" />
புதுடெல்லி:
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல் மந்திரி கமல் நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா இடையே பனிப்போர் நீடித்து, தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 21 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 22 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அம்மாநில சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர்.
ஆளும்கட்சியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக விலகியதால் அங்கு கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்